Sunday, March 4, 2012

Bharathiar Poetry: Kannan Paattu


கண்ணன் பாட்டு
பாங்கியை தூது விடுத்தல்

ஆசை முகமறந்து போச்சே - இதை
ஆரிடம் சொல்வேனடி, தோழி?
நேச மறக்கவில்லை நெஞ்சம் - எனில்
நினைவு முகமறக்கலாமோ?

கண்ணில் தெரியுதொரு தோற்றம் - அதில்
கண்ண னழகு முழுதில்லை.
நண்ணு முகவடிவு காணில் - அந்த
நல்ல மலர்ச்சிரிப்பை காணோம்.

(p.300 in my book)

No comments:

Post a Comment