Monday, March 5, 2012

Bharithiar - Mukthi


இன்பமும் ஓர்கணத் தோற்றம் - இங்கு
இளமையும் செல்வமும் ஓர்கணத் தோற்றம்
துன்பமும் ஓர்கணத் தோற்றம் - இங்குத்
தோல்வி முதுமை ஒருகணத் தோற்றம்.

தோன்றி அழிவது வாழ்கை - இதில்
துன்பத்தோடு இன்பம் வெறுமை என்றோதும்
மூன்றில் எது வருமேனும் - களி
மூழ்கி நடத்தல் பரமசிவ முக்தி.

பாரதியார்
(p.475 in my book)

No comments:

Post a Comment